தேசிய பொசன் வாரம் இன்று ஆரம்பமாகிறது.
அதன்படி இந்த வருடத்தின் தொனிப்பொருள் “மிஹிந்து தேரரின் நற்பண்புகளின் சக்தியால் போர்த்தீயை அணைப்போம்” என்பதாகும்.
இதனை முன்னிட்டு மிஹிந்தலை, அனுராதபுரம் அதமஸ்தான, தந்திரிமலை உள்ளிட்ட பல புனித தலங்களில் சமய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஜூலை 2ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பொசன் வாரத்தில் அனுராதபுரத்திற்கு வருகை தரும் மக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொசன் பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகளும் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்