நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 46,000 ஐ தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரை நாட்டில் 46,037 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பதில் பணிப்பாளர் டொக்டர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போது நாளாந்தம் 600-650 டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேல் மாகாணத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்