இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட சட்டத்தரணிகளான ரகித ராஜபக்ஷ மற்றும் சரித் அபேசிங்க உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் சந்தேகநபர்களின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதாரகம இந்த உத்தரவை பிறப்பித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்