35 கிலோவுக்கும் அதிகமான ஹாஷிஸ் போதைப்பொருளுடன் 18 வயது கனேடிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கனடாவின் ரொறன்ரோவில் இருந்து டுபாய் ஊடாக EK-648 Emirates விமானத்தில் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமான நிலைய சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர், அவரது பயணப் பொதிகளை பரிசோதித்த போது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 35 கிலோ 265 கிராம் ஹஷிஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் ரூ. 352.65 மில்லியன் பெறப்பட்டுள்ளதுடன், இலங்கை சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் தற்போது ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்