இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55,000 ஐ தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இவ்வருடம் இதுவரையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55,406 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆகவும் அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 1024 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாளை ஆரம்பமாகி 3 நாள் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்