அதுருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஐந்து அதிசக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள்களும் இரண்டு போலி இலக்கத் தகடுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்படி, அவர்களுடன் ஹோகந்தர பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹோமாகம பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் குழுவொன்று ஹோகந்தர பிரதேசத்தில் இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்