தரமற்ற தேங்காய் எண்ணெய் சந்தைப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை.

Adjust the font size:     


எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் தரமற்ற தேங்காய் எண்ணெயை சந்தையில் வெளியிடுவதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வின் போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சந்தைக்கு வெளியிடப்படும் தேங்காய் எண்ணெயின் தரம் தொடர்பான பிரச்சினைகள் காணப்படுவதாகவும், எனவே, உற்பத்திகளை தரப்படுத்துவதற்கான வேலைத் திட்டத்தை தயாரிக்கும் போது இது குறித்து நுகர்வோருக்கு தெரிவிக்கப்படும் என்றும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post