வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்று தருவதாக கூறி பண மோசடி - மாலம்பே பகுதியில் ஒருவர் கைது

Adjust the font size:     

Image - www.indiatvnews.com

முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் செயலாளர் போல் நடித்து வெளிநாட்டு தொழில்வாய்ப்பினை பெற்று தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் பணம் மோசடி செய்ய முயற்சித்த நபர் இன்று மாலம்பே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொட பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்  சுற்றிவளைப்ப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீரகட்டிய பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபர் ஜப்பானில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல்வேறு நபர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொள்ள முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post