பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனருக்கு ஒரு வார கால கடமை லீவு

Adjust the font size:     


கொள்ளுப்பிட்டி டூப்ளிகேஷன் வீதியில் மரம் முறிந்து விழுந்ததில் விபத்துக்குள்ளான பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனருக்கு ஒரு வார கால கடமை லீவு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இருவரும் மன உளைச்சலில் உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அனர்த்தம் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோனின் பணிப்புரையின் பேரில் இந்த கடமை லீவு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
கொள்ளுப்பிட்டியில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மீது பழமையான ரொபரோசியா மரம் நேற்று (06) காலை விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post