அகில இலங்கை தேசிய மட்ட எறிபந்து போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

Adjust the font size:     

தேசியமட்டத்தில் புகழ் தேடித்தந்த எறிபந்து அணியினரையும் பயிற்றுவிப்பாளர்களையும் வரவேற்கும் நிகழ்வு இன்று மாக்கான் மாக்கார் தேசியப் பாடசாலையின் அதிபர் M.H. முஸம்மில் கபீர் சேர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் J. றிப்கா மற்றும் உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் H.M.A. மாஜித் சேர் அவர்களும் கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களை வாழ்த்தி வரவேற்றார்கள்.

இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.


How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post