சம்மாந்துறை பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் - Video

Adjust the font size:     

 




 
 

 
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்தில் குடியிருப்புகளை நோக்கி வரும் காட்டு யானைகளின் நடமாட்டத்தினால் பிரதேசவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.
 
குறித்த பிரதேசத்தினுள் நேற்று இரவு யானைகளின் அட்டகாசத்தினால் வீட்டு மதில்கள், வாயிற்கதவு மற்றும் பயிர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. காணொளி மற்றும் புகைப்படங்கள் நீங்கள் அவதானித்துக் கொள்ள பதிவு செய்ய பட்டுள்ளது. 
 
விவசாய அறுவடை காலம் என்பதால் காட்டில் உள்ள யானைகள் பிரதேசத்தை நோக்கி வருகிறது இதனால் இரவு நேரங்களில் அச்சம் நிலவிவருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
 
மேலும் இரவு வேளைகளில் ஊடுருவும் காட்டு யானைகள் அயலிலுள்ள காடுகளுக்குள் இருந்து குறித்த கிரமங்களுக்குள் வந்து சேதம் விளைவித்து வருவதாக மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

- Mubarak Aslam


How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post