நீதிமன்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் சாக்குப்போக்கில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் நீதிமன்ற தாமதங்களை நீக்குவதற்கு தற்போது கடமையாற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கு பதிலாக உச்ச நீதிமன்றத்திலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் நிலவும் வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தினார்.
நிறைவேற்று அதிகார சபையும் சட்டவாக்க சபையும் இணைந்து நீதித்துறை மற்றும் அதன் சுதந்திரத்தின் மீது செல்வாக்கு செலுத்த முயற்சிப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா மேலும் தெரிவிக்கையில், பொது மக்கள் அதிகாரத்தை நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்டவாக்க சபை போன்ற சட்டப்பூர்வ நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளனர், மக்கள் விடுதலை முன்னணி அல்லது டில்வின் சில்வாவின் தலைமையகத்திற்கு அல்ல.