டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75,000ஐ தாண்டியுள்ளது, இறப்பு எண்ணிக்கை 51 ஆக உள்ளது

Adjust the font size:     

கடந்த வருடத்தில் நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 75,000ஐ தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு நோயினால் 51 நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களிலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, 11 மாவட்டங்களில் உள்ள 63 சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் இன்று விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்படுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் கபில கன்னங்கர தெரிவித்தார்.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post