வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுனு மஹா கதிர்காமம் தேவாலயத்தின் எசல பெரஹெர திருவிழாவின் முதலாவது ஊர்வலம் இன்று (15) இரவு வீதி உலா வரவுள்ளது.
இதன்படி, 15 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் இறுதி ரந்தோலி பெரஹெரா எதிர்வரும் 29ஆம் திகதி வீதி உலா வரவுள்ளதாக கதிர்காமம் தேவாலய பஸ்நாயக்க நிலமே ஆராச்சிகே திலின மதுசங்க தெரிவித்தார்.
இந்த ஆண்டுக்கான பெரஹெரா திருவிழா எதிர்வரும் 30ஆம் திகதி மெனிக் ஆற்றின் 'ஜீவமாலி' தெப்பத்தில் நீர் வெட்டும் நிகழ்ச்சியுடன் நிறைவுபெற உள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்
Article Link:
How do you feel about this news?
Advertisement