குடும்பத்துடன் சென்ற முச்சக்கரவண்டி பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர் குடும்பத்துடன் சென்ற முச்சக்கரவண்டி பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர் - Theevukaran News குடும்பத்துடன் சென்ற முச்சக்கரவண்டி பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர் குடும்பத்துடன் சென்ற முச்சக்கரவண்டி பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

குடும்பத்துடன் சென்ற முச்சக்கரவண்டி பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்

Adjust the font size:     

காலி-கொழும்பு பிரதான வீதியில் பயாகல கட்டுகுருந்த பிரதேசத்தில் பேருந்தும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண்ணொருவரும் சிறு குழந்தையும் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, நேற்று (01) நள்ளிரவு 12.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மேலும் இருவர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று களுத்துறை கட்டுகுருந்த பிரதான பஸ் நிலையத்தில் நிறுத்தி மீண்டும் பயணத்தை ஆரம்பித்த போது எதிர் திசையில் இருந்து வந்த முச்சக்கரவண்டி பஸ்ஸின் முன்பகுதியில் திடீரென மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டியில் பயணித்த குடும்பம் ஒன்றானதுடன், 62 வயதான பாட்டி மற்றும் 12 வயது சிறுவனும் படுகாயமடைந்து களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கரவண்டியை உயிரிழந்த குழந்தையின் தாத்தா ஓட்டிச் சென்றுள்ளார், அவரும் பலத்த காயமடைந்து களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் மற்றுமொரு பெண் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post