தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்துடன் எந்தவொரு பிரச்சினையும் இன்றி மிகச் சிறப்பாக செயற்பட்டதாக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், தனது தனிப்பட்ட அரசியல் சித்தாந்தத்தைப் பொருட்படுத்தாமல், தான் ராஜதந்திரப் பொறுப்பை ஏற்ற நாள் முதல் அரசியலில் ஈடுபடவில்லை என குறிப்பிட்டுள்ளார். தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது, தன்னை நியமித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கூட உதவவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தூதரக அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட்டதன் மூலம் நாட்டுக்கான முக்கிய இலக்குகளை அடைய முடிந்ததாக தூதுவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை திரும்பியதும் நாட்டிற்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும், எந்த அரசியல் கட்சியுடனும் தன்னை இணைத்துக் கொள்ளப் போவதில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
தற்போதைய அரசாங்கம் தமது தற்போதைய வேலைத்திட்டத்திற்கு பங்களிக்குமாறு அழைப்பு விடுத்தால், நாட்டின் நலனுக்காக தனது சேவையை வழங்கத் தயங்கமாட்டேன் என தூதுவர் மஹிந்த சமரசிங்க தனது உரையை நிறைவு செய்தார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்