நாட்டின் பஸ் தொழிற்துறையை கல்வி கற்ற சந்ததியினர் மற்றும் விசேட அறிவைக் கொண்ட தனிநபர்கள் அணுகக்கூடிய துறையாக மாற்றுவதற்கு எதிர்பார்ப்பதாக இலங்கை சொகுசு பஸ் சங்கம் தெரிவித்துள்ளது.
இத்தொழிலை கையகப்படுத்தும் அடுத்த சந்ததியினர் பெருமையடைய வேண்டும் என்றும், தற்போதைய கலாசாரமான "உள் சண்டை மற்றும் மோதல்" கலாசாரத்திலிருந்து ஒரு படியாவது இத்துறை விலகிச் செல்ல வேண்டும் என்றும் சங்கத்தின் தலைவர் நிகித கிரேரோ குறிப்பிட்டார்.
பஸ் துறையில் தம்மை அர்ப்பணித்துள்ள தொழில்முனைவோர், ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களைப் பாராட்டி “மாவதே அபிமான்” என்ற தலைப்பில் விருது வழங்கும் விழா ஜூலை 31 ஆம் தேதி நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்