யாழ் கிங்ஸ் அணியின் உரிமையாளர் கைது!

Adjust the font size:     

லங்கா பிரீமியர் லீக்கில் (எல்பிஎல்) யாழ் கிங்ஸ் அணியின் உரிமையாளரை ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டின் பேரில், விளையாட்டு தொடர்பான குற்றங்களை தடுப்பதற்கான இலங்கை பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

யாழ் கிங்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரென அடையாளம் காணப்பட்ட இந்த சந்தேகநபர் விளையாட்டு தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post