முன்பள்ளிக் குழந்தைகளை கொசுக்கடியிலிருந்து பாதுகாக்கும் வகையில் கை, கால்களை மறைக்கும் வகையில் உரிய ஆடைகளை அணிந்து முன்பள்ளிக்கு அனுப்புமாறு பெற்றோர்கள் கேட்டுக் கொள்ளப்படுவதாக மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சர் சரோஜா பால்ராஜ் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களை நுளம்புக் கடியிலிருந்து பாதுகாக்கும் வகையில் கை, கால்களை மறைக்கும் வகையில் பொருத்தமான ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வருவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தது.
இதன்படி, இது குறிப்பாக பாடசாலை மாணவர்களுக்கு மிகவும் பொருத்தமானது எனவும், முன்பள்ளி குழந்தைகளுக்கும், குழந்தைகளின் பாதுகாப்பிற்காகவும் நுளம்பு விரட்டிகளை பயன்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் இரண்டு வாரங்களில் இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென அமைச்சர் சரோஜா பால்ராஜ் மேலும் தெரிவித்தார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்