தனியார் நிறுவனங்களுக்கு விசா வழங்குவதைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒப்பந்தங்களின் சட்டபூர்வமான தன்மையை மறுபரிசீலனை செய்வதற்கான முடிவை நீதிமன்றத்திற்கு அட்டர்னி ஜெனரல் தெரிவிக்கிறார் தனியார் நிறுவனங்களுக்கு விசா வழங்குவதைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒப்பந்தங்களின் சட்டபூர்வமான தன்மையை மறுபரிசீலனை செய்வதற்கான முடிவை நீதிமன்றத்திற்கு அட்டர்னி ஜெனரல் தெரிவிக்கிறார் - Theevukaran News தனியார் நிறுவனங்களுக்கு விசா வழங்குவதைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒப்பந்தங்களின் சட்டபூர்வமான தன்மையை மறுபரிசீலனை செய்வதற்கான முடிவை நீதிமன்றத்திற்கு அட்டர்னி ஜெனரல் தெரிவிக்கிறார் தனியார் நிறுவனங்களுக்கு விசா வழங்குவதைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒப்பந்தங்களின் சட்டபூர்வமான தன்மையை மறுபரிசீலனை செய்வதற்கான முடிவை நீதிமன்றத்திற்கு அட்டர்னி ஜெனரல் தெரிவிக்கிறார்
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

தனியார் நிறுவனங்களுக்கு விசா வழங்குவதைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒப்பந்தங்களின் சட்டபூர்வமான தன்மையை மறுபரிசீலனை செய்வதற்கான முடிவை நீதிமன்றத்திற்கு அட்டர்னி ஜெனரல் தெரிவிக்கிறார்

Adjust the font size:     

இலத்திரனியல் வீசா (இ-விசா) வழங்கலை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு கடந்த நிர்வாகத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் சட்டபூர்வமான தன்மையை மீள்பரிசீலனை செய்ய தற்போதைய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இ-விசா நடைமுறைகளை அவுட்சோர்ஸ் செய்வதற்கான முந்தைய அமைச்சரவையின் தீர்மானத்தை சவால் செய்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் (FR) மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விவேகா சிறிவர்தன இதனைத் தெரிவித்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புள்ளி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இ-விசா நடைமுறை தொடர்பில் தனியார் நிறுவனங்களுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தங்களின் சட்டபூர்வமான தன்மையை ஆராய்வதற்காக தற்போதைய அமைச்சரவை உப குழுவொன்றை நியமித்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்தார். குழு தற்போது உண்மைகளை ஆய்வு செய்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், அதன் முன்னேற்றம் குறித்து தெரிவிக்க எதிர்கால தேதியைக் கோரினார்.

இந்த நிலையிலேயே, தற்போதைய அரசாங்கம் கொடுக்கல் வாங்கலை இரத்துச் செய்ய தீர்மானித்தாலும், தாங்கள் மனுவைத் தொடர உத்தேசித்துள்ளதாக மனுதாரரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றில் தெரிவித்தார்.

இந்த வழக்கில் தற்போதைய அமைச்சரவை உறுப்பினர்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டார். அதன்படி, தற்போதைய அமைச்சரவை உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மனுக்களை செப்டம்பர் 29-ம் தேதி மீண்டும் அழைக்கவும் உத்தரவிட்டனர்.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post