இலங்கையில் முதன்முறையாக கால்வாயில் நிர்மாணிக்கப்படும் சூரிய சக்தி திட்டமான 'கனால்-மேல் சூரிய ஒளி' திட்டத்திற்கான ஆரம்ப சாத்தியக்கூறு ஆய்வு மஹியங்கனையில் உள்ள வியன்னா கால்வாயில் நடத்தப்பட்டுள்ளது.
வியன்னா கால்வாய் 20 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட அகலமான கால்வாய் என்பதாலும், வருடத்தின் பெரும்பகுதிக்கு உகந்த சூரிய வெளிச்சம் என்பதாலும், தேசிய மின் கட்டத்திற்கு பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனைச் சேர்க்கும் திறனைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்திற்கு வியன்னா கால்வாய் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சோலார் பேனல்கள் மூலம் கால்வாயை மூடுவதன் மூலம், இந்தத் திட்டம் நீர் ஆவியாவதைக் கட்டுப்படுத்தவும், மிகவும் வெப்பமான வானிலை நிலைமைகளின் கீழ் பொருத்தமான மட்டத்தில் நீர் வெப்பநிலையை பராமரிக்கவும், மேலும் பசுமை ஹைட்ரஜன் போன்ற மேம்பட்ட ஆற்றல் திட்டங்களுக்கு அடித்தளம் அமைக்கவும் உதவும்.
காட்டு யானைகள் கால்வாயில் விழும் அபாயத்தைக் குறைக்கும் பாதுகாப்பான மின்சார யானை வேலியும் இத்திட்டத்தில் உள்ளடங்குவதாகவும், இது தொடர்பான விஷேட கள கண்காணிப்பு மற்றும் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடலும் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.