இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 66,064 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் (10) டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளதாகவும் அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் 13,556 நோயாளர்கள், கொழும்பு மாவட்டத்தில் 13,355 நோயாளர்கள், மாத்தறை மாவட்டத்தில் 4,699 நோயாளர்கள், களுத்துறை மாவட்டத்தில் 4,425 நோயாளர்கள் என மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35,000ஐ நெருங்கியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்