அக்ரஹார தரவுத்தளத்தை புதுப்பிக்க அனைத்து அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்பட்ட காலக்கெடு ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இதன்படி, பயனாளிகள் தங்களது தகவல்களை விரைவில் புதுப்பிப்பதை முடிக்குமாறு தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் தலைவர் கலாநிதி விசாகா வனசிங்க கேட்டுக்கொள்கிறார்.
அரச மற்றும் மாகாண அரச சேவையில் உள்ள சுமார் 900,000 பேர் இந்த காப்புறுதியின் நேரடிப் பயனாளிகள் எனவும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் சுமார் 300,000 பேர் இதன் மூலம் நன்மைகளைப் பெறுவார்கள் எனவும் கலாநிதி விசாகா வனசிங்க மேலும் தெரிவித்தார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்