வவுனியா மேயர் மற்றும் சாவகச்சேரி நகரசபையின் உப தலைவர் ஆகியோரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்குவதற்கு வடமாகாண ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன்படி, வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் மேற்கொண்ட விசேட விசாரணையைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
வவுனியா நகரசபையின் மேயராக கடமையாற்றிய சுந்தரலிங்கம் காண்டீபன் மேயர் பதவி மற்றும் உறுப்பினர் பதவியையும், சாவகச்சேரி நகரசபையின் உப தவிசாளராக கடமையாற்றிய ஞானப்பிரகாசம் கிஷோரும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் உப தலைவர் மற்றும் உறுப்புரிமையை இழந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கீழே உள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்