வருடாந்த பஸ் கட்டண திருத்தத்தை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்துமாறு தனியார் பஸ் சங்கங்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளன.
இதன்படி நேற்று (24) எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் ஐந்து நாட்களுக்குள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் கட்டண திருத்தம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்தார்.
ஜூலை மாத பஸ் கட்டண திருத்தத்தின் மூலம் 15%க்கும் அதிகமான திருத்தம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்