பிரவுன் சர்க்கரையுடன் வெள்ளை சர்க்கரை கலந்து பேக்கேஜ் செய்யப்பட்டு குறைந்த விலையில் பிரவுன் சர்க்கரையாக சந்தைக்கு விநியோகம் செய்யப்படும் தொழிற்சாலை மற்றும் கடை மீது சோதனை நடத்தப்பட்டுள்ளது.
சில காலமாக ஆரோக்கியமற்ற முறையில் பொதி செய்யப்பட்ட 2000 கிலோ கிராம் சீனி மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களும் நேற்று மாலை கைப்பற்றப்பட்டதாக கொட்டபொல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
சர்க்கரையில் ரசாயனம் கலந்து சந்தைக்கு வினியோகிக்கப்படுவதாக பொதுமக்கள் எழுத்துப்பூர்வமாக அளித்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
அங்கு கைப்பற்றப்பட்ட பொருட்களில் சீனி கலக்க பயன்படுத்தப்படும் சிமென்ட் கலவையொன்று, தராசு, கேஸ் அடுப்பு, சீலர் உள்ளிட்ட பொருட்கள் அந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.
சந்தேகநபர் சீனி கொண்டு வருவதற்காக எம்பிலிப்பிட்டிய பகுதிக்கு சென்றுள்ளதாகவும், சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரின் மனைவி மாத்திரம் வீட்டில் இருந்ததாகவும், அதனால் அது தொடர்பான பொருட்கள் வீட்டில் வைத்து சீல் வைக்கப்பட்டதாகவும் தெனிய பொது சுகாதார பரிசோதகர் ஈ.எஸ்.ஜே.பத்திரன தெரிவித்தார்.
