வருடத்தின் முதல் பாடசாலை தவணை ஆரம்பிக்கும் முன்னர் பாடசாலை பாடப்புத்தகங்கள் மாணவர்களிடம் கையளிக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட சிலருக்கே சீருடை வழங்கப்படும் என பல்வேறு நபர்களால் மேற்கொள்ளப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்களை நிராகரிப்பதாக அமைச்சர் இங்கு தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு மழைக்காலத்திற்குள் பாடசாலை சீருடை மற்றும் மதிய உணவு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அனைத்து பாடத்திட்டங்களையும் உள்ளடக்கி, விடுபட்ட அனைத்துப் படிப்பையும் மீளப் பெறுவதே இந்த பௌதீக வசதிகளை வழங்குவதற்கான எதிர்பார்ப்பு என அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும், கடந்த ஆண்டை விட இம்முறை குறைந்த விலையில் பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு அரசு வாய்ப்பளித்துள்ளதாக மேலும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
