15.09.2023 மாலை 7 மணியளவில், பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த உலகளாவிய விருது வழங்கும் விழாவில் 10க்கும் மேற்பட்ட நாடுகள் பங்குபற்றிய மிகவும் சக்திவாய்ந்த மற்றும் செல்வாக்குமிக்க பெண்களுக்கான சர்வதேச விருதை புஷ்பா ரம்யானி சொய்சா பெற்றார்.
அரசியல் அதிகாரங்கள், வணிக சக்திகள், அறிஞர்கள், பல்வேறு கேஷ்டிரங்களின் வலிமைமிக்கவர்கள் உட்பட ஏராளமான மக்கள் இந்த நோக்கத்திற்காக பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டனர்.
உலக மனிதாபிமான அறக்கட்டளை இதை ஏற்பாடு செய்திருந்தது. செவிலியர் ஒருவர் இதுபோன்ற விருதைப் பெறுவது இதுவே முதல் முறையாகும்.
15.09.2023 அன்று லண்டன் சேம்பர் ஆஃப் காமர்ஸில் நடைபெற்ற குளோபல் எகனாமிக் ஃபோரம் உச்சிமாநாட்டில் G20 அமைப்பால் அவருக்கு Global ICON விருதும் வழங்கப்பட்டது. அதே போன்று உலகளாவிய அமைப்பின் உறுப்புரிமையும் இலங்கைத் தூதுவராக இவருக்கு வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். புஷ்பா ரம்யானி சொய்சா பிரித்தானிய பாராளுமன்றத்திலும் லண்டன் வர்த்தக சபையிலும் இரண்டு சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார்.


