அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மழைக்கான சாத்தியம்

Adjust the font size:     

Creator: DINUKA LIYANAWATTE Credit: REUTERS

எதிர்வரும் நாட்களில், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களுடன் புத்தளம், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேலும், காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்குள் அமைந்துள்ள பகுதிகளில் 50 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகலாம்.

அம்பாந்தோட்டை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.

மாலை அல்லது இரவு வேளைகளில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதுடன் ஊவா மாகாணத்தின் சில இடங்களில் இதே மழைவீழ்ச்சியை எதிர்நோக்கக்கூடும்.

திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும், வடக்கு, வடமேல், வடமத்திய மாகாணங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.


கொழும்பு நோக்கிச் செல்லும் வழியில் புத்தளம், அம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் காலி உட்பட பல்வேறு கடல் பிராந்தியங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் மழை பெய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.


How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post