நாட்டின் பல பகுதிகளில் வெள்ள அபாயம்

Adjust the font size:     

Image - timesofindia.indiatimes.com

நில்வலா ஆற்றின் தாழ்வான பகுதிகளில் சிறிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடும் என அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொட்டபொல, பிடபெத்தர, அக்குரஸ்ஸ, பஸ்கொட, அத்துரலிய, மாலிம்பட, திஹகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர பிரதேச செயலாளர் பிரிவுகளில் சிறு வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது என திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பிரதேசங்களில் வசிப்பவர்களும், போக்குவரத்து சாரதிகளும் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் மேலும் அறிவிக்கின்றது.

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post