இன்ஜின் இயக்க பொறியியலாளர்கள் சங்க போராட்டம் : ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

Adjust the font size:     

Creator: Chalabala Credit: Getty Images/iStockphoto

நேற்று (11) நள்ளிரவு முதல் ரயில் இன்ஜின் இயக்க பொறியியலாளர்கள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் பல ரயில் நிலையங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சம்பள அதிகரிப்பு கோரி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுவதாக தொழிற்சங்கத்தின்  செயலாளர் SRCM. சேனாநாயக்க கூறியபடி;   குறிப்பிட்டார்.

இன்று காலை சிலபம், கணேவத்தை மற்றும் அளுத்கம ஆகிய பகுதிகளில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் தெரிவித்தார்.
கொழும்பில் இருந்து, திட்டமிடப்பட்ட பல குறுகிய ரயில் பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கண்டி, பொல்கஹவெல, காலி, மஹவ, ரம்புகானை, குருநாகல், அவிசாவல போன்ற பல்வேறு இடங்களிலிருந்தும் ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருவதாக ரயில்வே போக்குவரத்துக்கான பிரதிப் பொது முகாமையாளர் குறிப்பிட்டார்

இன்று காலை தொடரும் வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 20 திட்டமிடப்பட்ட
ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post