குருந்தி விகாரை வழக்கை விசாரித்த நீதவான் நாட்டை விட்டு வெளியேறுகிறார் - காரணத்தை கண்டறியுமாறு ஜனாதிபதி ஆலோசனை

Adjust the font size:     

முல்லைத்தீவு குருந்தி விகாரை தொடர்பான முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் முல்லைத்தீவு நீதவான் டி. சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பொலிஸாருக்கோ அல்லது நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கோ அறிவிக்காமல் நீதவான் பதவி விலகியதால் ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கினார்.

எனவே, இந்த சம்பவத்திற்கான மூல காரணத்தை உடனடியாக ஆராயுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post