வாகனங்கள் தவிர்ந்த இறக்குமதிகளுக்கான கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் நீக்கம்

Adjust the font size:     

Creator: asiandelight  |  Credit: Shutterstock / asiandelight

தற்போது இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுள்ள வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளையும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதல் இலங்கை சுங்கப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை இணையத்தில் ஏலம் விடுவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அவர் இதனைக் ஒருகுடவத்த ஆர். டி. சி. சுங்க முனையத்தில் நேற்றைய கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டு குறிப்பிட்டிருந்தார்.

பல தடவைகள், சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 18,765 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் அமைச்சரின் கண்காணிப்புக்கு உட்பட்டன.

இதனால் அரசுக்கு 14 கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

இந்த மதுபான பாட்டில்கள் எதிர்காலத்தில் உரிமம் பெற்றவர்களுக்கு பொது ஏலத்தில் போட்டி விலையில் ஏலம் விடப்படும் எனவும் தெரிவித்தார். 


How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post