அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரியின் விவசாய கற்கை நெறிப்பிரிவினரால் கல்லூரி வளாகத்தில் செய்கை பண்ணப்பட்ட வேளாண்மையின் அறுவடை விழா கல்லூரியின் பதில் அதிபர் எம்.எம்.ஹசன் அவர்களின் தலைமையில், கல்லூரியின் பதிவாளர் எம்.ஏ.சி.எம்.றகீப் அவர்களின் பிரசன்னத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இவ்வினிய நிகழ்வில், கல்லூரியின் வர்த்தக பிரிவுத்தலைவர் எம்.எஸ்.எம்.றாபி, தகவல், தொழில் நுட்ப போதனாசிரியர் எம்.பி.எம்.சிராஜ், விவசாய கற்கை நெறியின் புறப்போதனாசிரியர் எம்.ஐ.எம்.நசீர், விவசாயத் திணைக்களத்தின் ஓய்வு நிலை கிழக்கு மாகாணப் பணிப்பாளரும், கல்லூரியின் முன்னாள் விவசாய கற்கை நெறியின் புறப்போதனாசிரியருமான வை.பி .இக்பால் போன்றோரும் கலந்து கொண்டு நெல் அறுவடையை மேற் கொண்டதுடன், விவசாய கற்கை நெறியின் விடுகை மாணவ, மாணவிகளும், புதிய மாணவ,மாணவிகளும், கைதேர்ந்த விவசாயிகளும் கலந்து கொண்டு அறுவடையை மேற் கொண்டதுடன், மாணவர்களால் விவசாயப் பாட நெறி தொடர்பாக விளக்கங்களும் அளிக்கப்பட்டன.
- Mohamed Naleer
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Eastern


