கல்வி அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு இணைந்து ஆரம்பிக்கும் சிசு செரிய பேருந்து சேவைக்காக 200க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகள் சேர்க்கப்பட உள்ளன.
கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இந்த போக்குவரத்து சேவையை சீரமைக்க இந்த வருடம் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
